'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படத்திற்கு பிறகு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ''கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 


இதன் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் ஹீரோ, ஹீரோயினை பார்த்திபன் அறிவித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கே.பாக்கியராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். ஹீரோயினாக பார்வதி நாயர் நடிக்கவுள்ளார். இவர் அஜித்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், 'நிஷா' ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் வெற்றிக்காக போராடி வரும் சாந்தனுவை, இந்த படத்தில் நடிக்க வைப்பதன் மூலம், சினிமாவில் தன்னுடைய குருவான  பாக்யராஜிற்கு, நன்றிகளை தெரிவித்து கொள்வதாக பார்த்திபன் கூறியுள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: