ரியோ:
பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையுடன் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கப் பதக்கம் வென்று நம்நாட்டின் புகழை மேலும் உயர்த்தி உள்ளார்.


பிரேசிலி்ல் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தேவேந்திர ஜஜாரியா எப் 46 பிரிவில் 63.97 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்து தங்கம் வென்று தந்துள்ளார். 


தனது உலக சாதனையான 62.15மீ. தூாரத்தை தற்போது 63.97 மீ., தூரம் வீசி முறியடித்துள்ளார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா என்ற சாதனையை படைத்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: