சென்னை:
வெற்றிக்கூட்டணி மீண்டும் கைக்கோர்த்தா அந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறுமா? எகிறாதா? எகிறும்தானே...அப்படிப்பட்ட செய்திதான் இது.


வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை படம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. இந்த படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்று எல்லாரும் பாராட்டிய படம். இதில் போலீஸ் அதிகாரியாக சக்கைப்போடு போட்டவர் சமுத்திரகனி. இதுக்காக இவர் தேசிய விருது வாங்கியது தனிக்கதை. அதெல்லாம் நமக்கு வேண்டாம். விஷயத்துக்கு வருவோம். 


இப்போ வெற்றிமாறன்... இதோ... அதோன்னு சொல்லிக்கிட்டு இருந்த தனுசை வைத்து இயக்க இருந்த வடசென்னை படத்திற்கு பூஜையும் போட்டாச்சு. இந்த படம் 3 பாகமாக வரும்னு தனுஷே சொல்லிட்டார். 


இவங்க இரண்டு பேரு சேர்ந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். இப்போ நானும் உள்ளேன் ஐயான்னு கையை உயர்த்திக்கிட்டு வந்திருக்காரு சமுத்திரக்கனி. இந்த படத்துல இவருக்கு ரொம்ப "கனமான" வேடமாம். வில்லன் யாரு தெரியுங்களா? பொல்லாதவனின் மிரட்டிய டேனியல் பாலாஜிதான். ஹீரோயின் சமந்தா.


இப்படி வெற்றிக்கூட்டணிக்காகத்தான் காத்திருந்தோம்னு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 


మరింత సమాచారం తెలుసుకోండి: