சென்னை:
போலீஸ் இல்லடா... பொறுக்கி... வசூலில் ரவுண்டு கட்டி அடித்த இந்த வசனம் வந்த படத்தை மறக்க முடியுமா? என்ன படம் என்று தெரியலையா!


ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் சாமி. அதேபோல் ஒரு ஆல்டைம் ஹிட் விக்ரமுக்கு பிறகு அமையவில்லை என்பதை மறுக்காமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 


சிங்கம் 3 வரை எடுத்து தள்ளிய ஹரி ஏன் சாமியை கண்டுக்கொள்ளவில்லை என்று ரசிகர்கள் கேட்காத நாளே இல்லை. ஆனால் எதற்கும் நேரமும் காலமும் கூடி வரவேண்டும் இல்லையா... இப்போது அது ஒன்றாக அமைந்து விட்டது. 


ஹரி - விக்ரம் உறவில் ஏற்பட்ட உரசல்தான் இவர்கள் அருள் படத்துக்குப் பிறகு இணையாமல் போனதற்கு காரணம் எனவும் காரணம் கூறப்பட்டது. காலம் அந்த ரணத்தை ஆற்றி வைக்க ஹரியும், விக்ரமும் பழையபடி ஒன்றாகியிருக்கிறார்கள்.


 இருமுகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹரி, எஸ் 3 படம் முடிந்ததும் சாமி இரண்டாம் பாகத்தை இயக்குகிறேன். விக்ரமே அதில் நடிக்கிறார். இரு முகனை தயாரித்திருக்கும் தமீன் பிலிம்ஸே படத்தை தயாரிக்கும் என்று சொன்னார் பாருங்க... இப்பவே ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விட்டனர். 


அப்போ... இன்னொரு அதிரடிக்கு விக்ரம் இப்பவே பிட் ஆகிடுவார். வாழ்த்துக்கள்...



మరింత సమాచారం తెలుసుకోండి: