சென்னை:
அந்த மீசையும், நுனியில் வைத்திருந்த பூவும் இன்றும் நினைத்தால் சிரிப்பு சிரிப்பாகத்தான் வரும். ஞாபகம் வருதா... அதே... அதேதான்...


அந்த கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது. அட என்னங்க புரியலையா... இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க ஷங்கர் பச்சைக்கொடி காட்டிட்டார் என்று தகவல்கள் வந்துள்ளன.


ஷங்கர் படம் என்றாலே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர் இயக்கும் படம் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்துள்ளார்.


இதில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் ஹிட்... சாதா ஹிட்டா... மெகா ஹிட் இல்லியா... இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கத்தான் ஷங்கர் பச்சைக்கொடி காட்டிட்டாராம்.


வடிவேலு- சிம்புதேவன் கூட்டணியில் பார்ட் 2 தயாராகிறது. இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: