சென்னை:


கிடாரியையே வளைச்சு போட்டுட்டீங்களா மேடம்... மேடம்... என்கின்றனர் கோலிவுட் கோபாலுக்கள்.


என்ன விஷயம் என்றால்... தமிழ் சினிமாவில் "ஆச்சி" மனோரமாவிற்கு பிறகு காமெடியில் கலக்கி எடுத்தவர்... எடுப்பவர் என்றால் ஒரே ஆளை மட்டுமே கைகாட்டி சொல்ல முடியும். அவர் கோவைசரளா மட்டுமே. எத்தனை பெண் காமெடியன்கள் வந்தாலும் அவர்கள் விட்டில் பூச்சிகள் போல்தான்.


நின்று நிலைக்காமல் சென்றுள்ளனர். ஆனால் கோவை சரளாவே இன்று வரை தனக்காக இடத்தை விட்டு இம்மியும் அகலாமல் காமெடியில் கலக்கி வருகிறார்.


இவர் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க இருக்காராம். இப்படத்தை பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்குகிறார். சரி ஹீரோ யார் என்று கேட்கிறீர்களா?


"கிடாரி" சசிகுமார் தான் அவர். அட கொஞ்சமாச்சும் ஹீரோ கேரக்டருக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு இயக்குனர் ஆவார்ன்னு பார்த்தால் தொடர்ந்து நடிச்சிக்கிட்டு இருக்காரே. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கோவை சரளாவிற்கும், சசிகுமாருக்கும் என்ன உறவு என்பது தான் சஸ்பென்சாம்... சஸ்பென்சாம்... நடத்துங்கப்பா... 



మరింత సమాచారం తెలుసుకోండి: