மும்பை:
போங்க... மும்பையை விட்டு போங்க... என்று பாக்., நடிகர், நடிகைகளுக்கு ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 


பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட நடிகர் - நடிகைகள் மும்பையில் தங்கி இந்திப் படங்களிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னர் பெரும் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது.


இதனால்தான்  மும்பையில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் நடிகர்- நடிகைகள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மராட்டிய நவநிர்மான் சேனா துணை தலைவர் ஷர்மிளா ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் பவத்கான், பாகிஸ்தான் நடிகை மகிராகான் உட்பட நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் மும்பை வந்து சினிமா படங்களிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஷர்மிளா ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.


மும்பையில் உரிய ஆவணங்களுடன் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நடிகர் - நடிகைகள் உள்பட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே அவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பாகிஸ்தான் நடிகர்கள் மத்தியில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: