சென்னை;
யாருங்க... யார் ஏற்றுவாங்க... தலையை பிச்சுக்கிட்டு இருக்காங்களாம் தமிழக காங்கிரசார். இதற்காக ஆலோசனை கூட்டமும் நடத்தி இருக்காங்க...


சுதந்திர தினத்தன்று சத்தியமூர்த்திபவனில் யார் தேசியக் கொடியை ஏற்றுவது என்பது குறித்து மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்காங்க.


இதிலும் ஒற்றுமை இல்லை போலிருக்கு... என்னன்னா? கொடியேற்றுவது யார் என்று முடிவெடுப்பது அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சின்னா ரெட்டிதான் என்று சிரஞ்சீவி தெரவிக்க, அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் பொறுப்பு தலைவர்.


எனவே சுதந்திர தினத்தன்று யார் கொடியேற்றுவது என்பதை அவர்தான் முடிவெடுப்பார் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவும் மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அட போங்கப்பா... நீங்களும் உங்க "டக்"கும்... 


మరింత సమాచారం తెలుసుకోండి: