ஐதராபாத்:
என்ன கொடுமை... இது என்ன கொடுமை... என்று சோக கீதம் வாசிக்கின்றனர் அக்கட தேசத்தவர்கள். என்ன விஷயம்ன்னா?


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படத்துக்கு இதுவரை ஹீரோயின் கிடைக்கலையாம். அரசியல் ஆசையால் சினிமாவில் பெரிசா விழுந்த கேப்பை மூடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு களத்தில் குதித்துள்ளார் மெகாஸ்டார். தமிழ் கத்தி ரீமேக் தான் இப்போது இவரோட 150வது படமாக மாறிக்கிட்டு வருது. 


ராம்சரண் தயாரிக்க தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வி.வி.விநாயக் இயக்கி வருகிறார். இப்படி சிரஞ்சீவி படம் செமத்தியா டேக் ஆப் ஆனாலும் இன்னும் ஹீரோயின் அமையலையாம். இதனால் படக்குழு அல்லாடிக்கிட்டு இருக்காம். 


நயன்தாரா, அனுஷ்கா, இந்தி ஹீரோயின்கள் என்று பலரிடம் பேசியும் யாரும் இதுவரை ஒத்துக்கலையாம். காரணம் சிரஞ்சீவியோட வயசுதான் காரணமாக இருக்காம். இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ரேஞ்சில் ஹீரோயின் தேடும் படலத்தை தீயாய் பார்க்கிறார்களாம்.  இது என்னப்பா மெகா ஸ்டாருக்கு வந்த சோதனை என்று புலம்புகின்றனர் அக்கட தேசத்து ரசிகர்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: