கன்னட நடிகை ராஷ்மிக மந்தானா கன்னடத்தில் கிரீக் பார்ட்டி படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் இவர் அறிமுகம் ஆகி நடித்த சலோ என்ற படமும் சூப்பர்ஹிட் ஆனது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து றஆஷ்மிகாவுக்கும் அந்த படத்தின் நாயகனான ரக்ஷித் ஷெட்டியும் காதலில் விழுந்து இருவருக்கும் நிச்சயதார்த்தமும் ஆனது.



இதன் பின்னர் இரண்டாவது படமாக ராஷ்மிக்கா தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவகோண்டாவின் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அவருடன் நெருக்கமாக நடித்து முத்த காட்சிகளில் எல்லாம் நடித்ததால் இந்த படம் வெற்றி அடைந்த போதும் இவரது நிச்சயதார்த்தம் முடிந்தது.



இந்நிலையில் நேற்று ராஷ்மிக்கா இதனை பற்றி உடைத்து கூறினார். தனக்கும் ராஷ்மிகாவுக்கும் ஏற்பட்டது போல எவருக்கும் நடக்க கூடாது. நீங்கள் யாரும் கேட்பதை நம்பியே முடிவெடுக்கிறீர்கள் அதனால் உங்களை பற்றி தப்பு சொல்ல ஒன்றுமில்லை.



எந்த நாணயத்துக்குமே இரண்டு பக்கங்கள் உண்டு என்று கூறிய ராஷ்மிக்கா தான் தொடர்ந்து கன்னட படங்களிலும் நடிப்பதாக கூறியுள்ளார்.அடுத்ததாக ராஷ்மிக்கா மீண்டும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக டியர் காம்ரேட் படத்தில் நடிக்க உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: