புதுடில்லி:
உங்கள் கைகளில்தான் உள்ளது என்று நாட்டாமை அண்ணன் அமெரிக்கா சொம்பு இல்லாம பஞ்சாயத்து செய்துள்ளது. எதற்காக தெரியுங்களா?


காஷ்மீர் பிரச்னை மற்றும் பலூசிஸ்தான் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது இந்தியா மற்றும் பாக்., கைகளில்தான் உள்ளது என்று அமெரிக்கா சொல்லியிருக்குங்க...


இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா, அளித்த பேட்டி ஒன்றில் காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தான் விவகாரங்கள் தொடர்பாக தெரிவித்திருப்பதாவது: இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. உலகின் எங்கு பயங்கரவாத சம்பவங்கள் நடந்தாலும் அதனை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. (சொம்பை கையோடு தூக்கிக்கிட்டு போயிடுவீங்க)

தூதர் ரிச்சர்டு வர்மா

தூதர் ரிச்சர்டு வர்மா க்கான பட முடிவு


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதை சர்வதேச அளவில் ராஜாங்க ரீதியில் அணுக வேண்டும். பலூசிஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர் பிரச்னைகளுக்கு, சம்பந்தப்பட்ட இரு தரப்பினரான இந்தியாவும், பாகிஸ்தானும் தான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த விஷயம் இந்தியாவிற்கு தெரியாமலா இருக்கிறது. இதில் எதற்காக இப்போ நாட்டாமை சொம்பை தூக்கிக்கிட்டு வர்றார் என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: