நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சில காலமாக ஹீரோவாக நடிப்பை குறைத்து கொண்டு துணை வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் கொடூர வில்லனாக நடித்தார் அர்ஜுன்.



இந்நிலையில் அவர் இப்பொழுது தான் விஜய் அன்டனி உடன் நடித்த கொலைகாரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்பொழுது இவரது அடுத்த படம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. அடுத்ததாக அர்ஜுன் நடிகர் சிம்பு நடிக்க உள்ள அரசியல் படமான மாநாடு படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம்.



இதில் அர்ஜுன் மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: