சென்னை:
அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர் அந்த 6 பேரும் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இருக்கிறது.


சென்னை விமான நிலையத்தில் தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் இந்த சம்பவத்தால் அவர்கள் அடைந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவே இல்லையாம்.


சென்னை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிரங்கியது. அப்போதுதான் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது. விமானத்தின் முன் சக்கரம் வெடிக்கவே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. 


அந்த விமானத்தில் இருந்த 4 பயணிகள் மற்றும் 2 விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் உடனே மீட்டனர். சென்னையில் பலத்த காற்று வீசியதால், விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: