மும்பை:
இறுதிச்சுற்றில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த ரித்திகாசிங் தமிழ் கற்றுக்கொள்கிறாராம்.


அட ஆமாங்க... ஒற்றை படத்திலேயே உச்சத்தை தொட்ட நடிகையாக மாறி விட்டார் ரித்திகாசிங். இயல்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள இவருக்கு படவாய்ப்புகள் வந்து குவிகிறது.


தற்போது தமிழ், தெலுங்கு என்று மாறி மாறி நடித்து வருகிறார். இந்த மொழிகள் தெரியாததால் தமிழ் மற்றும் தெலுங்கை கற்றுக் கொள்ள தொடங்கி இருக்கிறாராம். அப்போதான் நடிக்க எளிமையாக இருக்கும். கேரக்டரை உள்வாங்கி நடிக்க முடியும்னு சொல்லுது பொண்ணு. பிழைக்க தெரிந்த பொண்ணுதான்.


Find out more: