புதுச்சேரி: 
அரசியல் ஒரு சாக்கடை... என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரியில் அமைச்சர் மக்களின் குறைகேட்டு சாக்கடைக்குள் கையை விட்டு அடைப்பை நீக்கினார் என்றால் எப்படி இருக்கிறது. ஆனால் நடந்துள்ளதே...


புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக் கண்ணன். இவர் காரைக்கால் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அமைச்சரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் பல பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.


அதில் முக்கியமான ஒன்று... தங்கள் பகுதியில் சாக்காடை கால்வாய் அடைத்து பல நாட்களாக கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி பெரும் நாற்றம் எடுக்கிறது என்று தெரிவித்தனர். 


பல முறை புகார் செய்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை போட்டும் கொடுத்து விட்டனர். அவ்வளவுதான் பொங்கி எழுந்த அமைச்சர் சற்றும் எதைபற்றியும் யோசிக்காமல் சாக்கடை கால்வாய் அருகே சென்றார். சட்டென்று மண்டியிட்டு சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை கையை விட்டு எடுத்தார் பாருங்க... அவ்வளவுதான்... பொதுமக்களுக்கும்... அதிகாரிகளுக்கும் ஷாக்கோ... ஷாக். 


பின்னர் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து கால்வாயில் அடைத்திருந்த அடைப்பை நீக்க செய்தார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: