
இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு செய்தி பரவி வந்தது. அது என்ன என்றல் மஹாநடி படத்தில் நாக சைதன்யா தனது தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவாக நடித்ததை அடுத்து இயக்குனர் க்ரிஷ் தான் இயக்கவுள்ள என்டிஆர் படத்திலும் சைதன்யாவையே நாகேஸ்வர ராவாக நடிக்க வைக்க அணுகியுள்ளார் என்பது தான் அது.

இதனை தொடர்ந்து இப்பொழுது காட்டு தீயாக பரவி வரும் செய்தி என்னவென்றால் க்ரிஷ் தனது படத்தில் சாவித்ரியாக நடிக்க வைக்க மீண்டும் கீர்த்தியையே அணுக உள்ளாராம். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்ன என்றால் மஹாநடி படத்தில் கீர்த்தி சாவித்ரியாக நடிக்க அவரை இயக்கும் இயக்குனர் கே.வி.ரெட்டியாக க்ரிஷ் நான்கைந்து காட்சிகளில் நடித்திருப்பார். பார்க்கலாம் மீண்டும் ஒரே வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டு மறுபடியும் சாவித்திரியாக மாறுவாரா என்று.
click and follow Indiaherald WhatsApp channel