கொடைக்கானல்:
மீண்டுமா... மீண்டுமா... என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். எதற்காக...


இதற்காகத்தான்... கொடைக்கானல் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்து போய் உள்ளனர். 


கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பாலக்கவை பகுதியில் கடந்த வாரம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டு இருந்துள்ளது. தோட்ட வேலைகளுக்கு சென்ற தொழிலாளர்கள் சிறுத்தையை பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் பறந்தது.


இந்நிலையில் தொழிலாளர்கள் பார்த்த அன்று இரவுஒரு தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை காளை மாட்டை தாக்க... மக்கள் அச்சத்தில் உறைந்து போய் விட்டனர். சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வர... ஒரு வாரமாக தலையையும் காட்டாமல் வாலை சுருட்டிக்கொண்டு  இருந்த சிறுத்தை மீண்டும் தன் சேட்டையை ஆரம்பித்துள்ளது. கீழ்குறிச்சி நகர் குடியிருப்பு பகுதியில் ஆடு மற்றும் கோழியை அடித்து கொல்ல... ஒரு வாரமாக நிம்மதியாக இருந்த மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: