மும்பை:
ஏன்... எனக்கு வசதியில்லையா என்ற ரீதியில் பதிலடி கொடுத்துள்ளார் பிபாஷா பாசு. என்ன மேட்டர் தெரியுங்களா?
நடிகை பிபாஷா பாசுவுக்கு சல்மான் கான் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை பரிசாக அளித்ததாக வெளியான செய்திகளுக்குதான் கடுப்பாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிபாஷாபாசு.


கடந்த 2 மாதமாக பாலிவுட்டை ஒரு செய்தி விடாமல் கலக்கி வந்தது. நடிகை பிபாஷா பாசுவுக்கு சல்மான் கான் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்தார்... கொடுத்தார் என்பதுதான் அது.


கடந்த ஏப்ரல் மாதம் சக நடிகர் கரண் சிங் குரோவரை திருமணம் செய்துகொண்ட பிபாஷா பாசு (37), இதுதொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘யாரிடமிருந்தும், எதற்காகவும் இதுபோன்ற பரிசை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுக்கு கான்... சல்மான்கான் என்ன சொல்ல போறார். அவர் என்னைக்கு எதற்கு பதில் சொல்லியிருக்கார் என்று கேட்கக்கூடாதுங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: