புதுடில்லி:
144 போட்டும்... அதெல்லாம் எங்களுக்கு சும்மா ஜீஜீப்பி என்று பேரணி போக பார்த்த டில்லி துணை முதல்வரை அலாக்காக கைது செய்துள்ளனர் போலீசார்.


டில்லி முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பனிப்போர் கோடை காலத்திலேயே கொளுத்தி எடுத்தது. இப்ப மழைக்காலம் வேறு வந்துவிட்டது. அதிகமாகத்தானே செய்யும். முதல்வர் கெஜ்ரிவாலும், கவர்னர் கவர்னர் நஜீப் ஜங்கிற்கும் இடையே அப்படி ஒரு அரசியல் மோதல்.


இதுக்கு பின்னாடி இருக்கிறது பிரதமர்தான்னு முதல்வர் கெஜ்ரிவால் நேரடியாக குற்றச்சாட்டை எழுப்பினார். இதனால் டில்லி அரசியல் அரங்கு பற்றிக் கொண்டது. இந்நிலையில் பிரதமர் மோடி வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.


உடனே விழுந்து 144 தடை உத்தரவு. ம்ஹீம்... இதெல்லாம் எங்களுக்கு ஜீ.ஜீ..ப்பி என்று துணை முதல்வரும், அவரது ஆதரவாளர்களும் பேரணியாக செல்ல...அப்புறம் என்ன போலீசார் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். இதனால் டில்லி அரசியல் அரங்கு பற்றிக் கொண்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: