சென்னை:
அப்பாவும் இசையமைப்பாளர், மகனும் இசையமைப்பாளர். இவங்க 2 பேரும் சேர்ந்து பாடினா... அந்த பாட்டு செம ஹிட் அடிக்கும் இல்லியா. அதுதான் இப்போ டிரெண்ட் ஆகிகிட்டு வரும் போலிருக்கு.


அந்த அப்பா, மகன் யாரு தெரியுங்களா? பிரபல இசையமைப்பாளர் தேவாவும், அவரது மகன் பநீகாந்த் தேவாவும்தான். இவர்கள் இருவரும் இணைந்துதான் புதுமுக இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கி வரும் படம் ஒன்றில் ஒரு பாடலை பாடியுள்ளனர். ஆனால் இந்த பாடலுக்கு இவர்கள் இசையமைக்கவில்லை என்பதுதான் ஹைலைட். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா


இந்த பாடலை ஒரே டேக்கில் இருவரும் பாடி அசத்தியுள்ளனர். இதேபோல் முன்பே இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன்ஷங்கர் ராஜாவும் 'நீதானே பொன்வசந்தம்' படத்தில் இடம்பெற்ற 'என்னோடு வா வா' என்ற பாடல் உள்பட ஒருசில பாடல்களில் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: