சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'ரெமோ'. இந்த படத்தின் ரிலீஸ் வியாபாரங்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில் இந்த படத்தின் செங்கல்பட்டு ரிலீஸ் உரிமைகளை யார் பெற்றிருக்கிறார்கள் என்று தெரியுமா.... வேறு யாருமில்லை. பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து, வெளியிட்ட ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தான் 'ரெமோ' திரைப்படத்தின் செங்கல்பட்டு உரிமைகளை பெற்றுள்ளது.


இதனால் இந்த படம் செங்கல்பட்டில் பிரம்மாண்டமாக வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி ராஜா தயாரித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: