சென்னை:
உண்மையா... பொய்யா... இந்த சினிமாக்காரங்களை நம்பவே முடியலையேன்னு தலையை பிய்த்துக் கொள்கின்றனர் ரசிகர்கள். என்ன விஷயம் தெரியுங்களா?


சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், சதீஷுக்கும் திருமணம் ஆனது என்று வதந்தி கிளம்பியது அனைவரும் அறிந்ததுதான். அதற்கு ஏற்றார்போல் விஜய் 60 படத்திற்காக கீர்த்தி சுரேஷும், சதீஷும் மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை கிளப்பியது. 


இந்நிலையில் ரக்ஷாபந்தன் அன்று கீர்த்தி ட்விட்டரில் சதீஷை வம்புக்கு இழுக்க... அதற்கு சதிஷ் கூறியுள்ள பதில்தான் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? 


கீசு மா.... பப்ளிக்குல இப்படியே பேசு... அப்போதான் உலகம் நம்பும் என்று டுவிட் போட்டுள்ளார்... என்னங்க நடக்குது....



మరింత సమాచారం తెలుసుకోండి: