சென்னை:
வாரிசை கரை சேர்க்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறாராம் இந்த நடிகர் கம் இயக்குனர் ஆன அப்பா... முயற்சி வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம் என்கிறார் கோலிவுட் கோகிலாக்கா... என்ன விஷயம் என்றால்!


நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி. இவர் பல படங்களில் நடித்தும் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் விட்டேனா பார்... என் வாரிசுக்கு தமிழில் இடம் பிடித்து கொடுப்பதுதான் முக்கிய வேலை என்று களம் குதித்துள்ளார் பாண்டியராஜன். 


மகனாச்சே... விட்டுடுவாரா... இப்போ பக்காவாக மீண்டும் ஒரு படத்துடன் மக்களை சந்திக்க வருகிறார். பேர் என்ன தெரியுங்களா? 
காதல் முன்னேற்ற கழகம். பிருத்வியுடன் சாந்தினி நாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகிறதாம். நாமும் வாழ்த்துவோம் படம் வெற்றிப் பெற...



మరింత సమాచారం తెలుసుకోండి: