தர்மபுரி: 
ஏய்... எங்க வந்த.. எங்கக்கிட்டயா என்று வீட்டுக்குள் நுழைய பார்த்த பாம்பை தன் கூட்டாளிகளோடு சேர்ந்து கடித்து கொன்ற நாய்தான் தற்போது ஹீரோவாக பார்க்கப்படுகிறது.


தர்மபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் செல்ல நல்ல பாம்பு  முயன்றுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் வளர்க்கும் நாய், பாம்பை பார்த்து விட்டது. அவ்வளவுதான் அந்த பாம்பை சுற்றி சுற்றி வந்து குரைக்க தொடங்கியது.


அட நம்ம நண்பரு எதற்கு குரைக்கிறாருன்னு எட்டிப்பார்த்த இன்னொரு நாயும் பாம்பை ரவுண்டு கட்ட ஆரம்பித்து விட்டது. அட என்னப்பா என்றபடி இன்னொரு நாயும் வர பாம்பை ஒரு அங்குலம் கூட நகர விடாமல் 3 நாய்களும் குரைக்க ஒரு நாய் பாம்பின் வாலை கடித்து சுற்றி சுற்றி பாம்பை சுழற்றி எடுத்தது. பின்னர் பாம்பை கடித்து கொன்றது. இது வீடியோவாகவும் எடுக்கப்பட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: