சிரியா:
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படையினர் நடத்திய தாக்குதல் குறித்த காட்சிகளை தற்போது அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. 


சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வருவது தெரிந்த விஷயம். இந்த தாக்குதலில் ரஷ்யா, ஈரான் மற்றும் பல்வேறு அமைப்புக்களும் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.


இந்நிலையல் சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படைகள் நடத்திய தாக்குதல் குறித்த காட்சிகளை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தற்போது வெளியிட்டுள்ளது.


கடந்த மாதம் 13ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் மன்பிஜ் நகரின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்றும்  பென்டகன் தெரிவித்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: