இயக்குனர் செல்வராகவன் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற பேய்ப்படத்தை இயக்கி வருகிறார். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங்,ரீரெகார்டிங் போன்ற போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இதற்கிடையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் குறித்து தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் 'மரியம்' என்ற குழந்தை பராமரிப்பாளர் கேரக்டரில் நடிக்கிறார் ரெஜினா கேசன்ட்ரா. வில்லியாக நந்திதா நடித்திருக்கிறாராம்.


அதுமட்டுமில்லாமல்,  எஸ்.ஜே.சூர்யாவுக்கும், நந்திதாவுக்கும் இடையே நடைபெறும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை நடு நடுங்க வைக்கும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளதாம். செல்வராகவனின் முதல் பேய்ப்படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் செல்வராகவன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: