சிம்பு நடிப்பில் தற்போது 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படம் உருவாகுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை க்ளோபல் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மூன்று கெட்டப்களில் நடிக்கும் சிம்புவிற்கு ஒரு கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஸ்ரேயாவின் கேரக்ட்டரை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். 


ஏஏஏ திரைப்படத்தில், ஸ்ரேயா செல்வி என்ற கேரக்டரில் நடிப்பதாகவும், இவரது கதாப்பாத்திரம் மிகவும் எமோஷனல் ஆனவை, ரசிகர்களை கவரும் வகையில் அவர் இந்த படத்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த படம் ஸ்ரேயாவிற்கு தமிழ் சினிமாவில், திருப்புமுனையாக அமையும் என கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: