'அகிரா' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் திரைப்படத்தை இயக்குகிறார். இதில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளி கிழமை தொடங்கியது. 


இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதன் பிறகு நடிகை ராகுல் ப்ரீத் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர். 


மேலும், ஆரம்பத்தில் இன்னொரு நடிகையை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு பதிலாக, முருகதாஸ் தேர்ந்தெடுத்து, அவரை அணுகியுள்ளார். அவர் பிரபல நடிகையின் மகள் என்பதனால், தான் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படதம் மிக பெரிய பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். இது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்தாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: