சென்னை:
கபாலி பீவர் இப்போதான் சற்றே குறைந்துள்ளது... இந்நிலையில் ஐ.ஐ.டி. மாணவருக்கு நேர்ந்த வேதனைதான் இந்த செய்தி...


ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் திரையரங்கில் வசூல் வேட்டை ஆடி வருகின்றது. இதுவரை கபாலி... கபாலி என்று இருந்த பீவர் தற்போதுதான் குறைந்து வருகிறது. இந்நிலையல் இப்படம் குறித்து சிறப்பு விவாத கூட்டம் ஒன்று நடந்தது.


இதில் ஒரு ஐ.ஐ.டி. மாணவர் கலந்துக்கொண்டு சில கேள்விகளை கேட்டார். பின்னர் இயக்குனர் ரஞ்சித்துடன் அந்த மாணவர் ஒரு செல்பி எடுத்து தன் பேஸ்புக்கில் பதிவு செய்தார். இதுதான் வினையாகி விட்டது. அந்த மாணவரை வேதனையில் ஆழ்த்திவிட்டது.


அந்த போட்டோவின் கமெண்ட் பாக்ஸில் பலரும் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அந்த மாணவரை திட்டியுள்ளனர். இது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை படமாக பாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: