சென்னை:
குவியுது... குவியுது... கபாலியால்... வாய்ப்புகள் அதிகம் குவியுது என்று மனதை திறந்து சொல்லியிருக்கிறார் கவிஞர் உமாதேவி.


விஷயம் என்னன்னா? ‘கபாலி’ படத்தில் 'மாயநதி', 'வீர துறந்தரா’ பாடல்களை எழுதியவர் கவிஞர் உமாதேவி. எம்.பில், பி.எச்.டி. பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவி பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. 


‘கபாலி’ படத்தின் செம சூப்பர் டூப்பர் ஹிட் இப்போது இவருக்கு அதிகளவில் வாய்ப்புகளை வழங்கி வருகிறதாம். இவர் தற்போது ‘ரங்கூன்’, ‘துக்ளக்’, ‘தப்பு தண்டா’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘அடங்காதே’, ‘மாயவன்’ என பல பாடங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறாராம். கபாலி கொடுத்த வாய்ப்பு இது என்று பெருமிதமாக சொல்றார்... சொல்றார்...



మరింత సమాచారం తెలుసుకోండి: