புதுடில்லி:
அதுக்கு இன்னொரு குணம் இருக்குங்க என்று காட்டமாக தெரிவித்துள்ளார் இவர். யார்... எதை பற்றி சொல்லியிருக்காங்க...


இதோ பாருங்க... சீனா வஞ்சக குணம் கொண்ட நாடு என்று சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பொங்கி எழுந்துள்ளார்.


இதுகுறித்து லோக்சபாவில் பேசும் போது அவர் கூறியதாவது: கபட மற்றும் வஞ்சக குணம் உடைய நாடுதான் சீனா. வலிமையில்லாத போது அமைதியாக இருப்பதும், வலுவடையும் போது பிரச்னையை ஏற்படுத்துவதும் இதன் பிறவி குணம் போல் உள்ளது. 


பாகிஸ்தானால் நமக்கு பிரச்னை குறைவுதான். ஆனால் சீனா, எப்போதும் நமக்கு துரோகம் செய்கிறது. இப்படி ஒரு பிடி பிடித்துள்ளார் சீனாவை. சமீபத்தில் இந்தியாவிற்கு எதிராக சீன பிடித்த போர்க்கொடிதான் இவரது காட்டத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: