ரியோ:
அங்குதான் அப்படி என்றால்... இங்குமா? ஒட்டுமொத்த அணிக்கும் விதிக்கப்பட்ட தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் ஊக்க மருந்து சர்ச்சைகளில் ரஷ்யா வீரர்கள் சிக்கியதால் ஒட்டுமொத்த ரஷ்யா அணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பாரா ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளன. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இப்போட்டிகள் நடக்க உள்ளது.


இப்போட்டிகளில் பங்கேற்கும் ரஷ்யாவின் வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர். இதனால் ஒட்டுமொத்த ரஷ்யா அணியும் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச பாரா ஒலிம்பிக் சங்கம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியிலும் ரஷ்யாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


இதற்கு எதிராக ரஷ்யா மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. என்ன செய்து என்ன பலன்... ஊக்கமருந்து ஏன் வந்தது?



మరింత సమాచారం తెలుసుకోండి: