ஜோத்பூர்:
குழந்தை என்னவானது.. தெரியாமல் தவிக்கின்றனர் ஜோத்பூர் நகர மக்கள். காரணம்?


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழ... இப்போது ஒட்டுமொத்த நகரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக உள்ளனர். 


பிஞ்வடியா கிராமத்தில் பழுதை சரி செய்வதற்காக ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாயை வெளியில் எடுத்துள்ளனர். நேரம் நீண்டுக் கொண்டே சென்றதால் கிணற்றை திறந்தபடியே விட்டு செல்ல அதுவே குழந்தையை உள்ளிழுத்த எமனானது.


இன்று காலை அதன் அருகே விளையாடி கொண்டிருந்த நேஹா என்ற 2 வயது குழந்தை தவறி 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததுதான் மக்களின் சோகத்திற்கு காரணம். குழந்தையை மீட்க அனைவரும் போராடி வருகின்றனர். நாமும் பிரார்த்திப்போம். குழந்தை நலமுடன் மீட்கப்படவேண்டும் என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: