சென்னை:
அப்படியா... அவரா?... என்று கேட்கின்றனர். தளபதி நடிகர் சண்டை போட்டாராம். யாரோடு என்று பதறாதீர்கள்.


பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் 2 கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் விஜய் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தோடு வெளிநாடு சென்றார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு திரும்பி வந்தார். இதையடுத்து 3ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஒரு முக்கிய சண்டைக்காட்சியை இயக்குனர் பரதன் சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் படமாக்க விரும்ப, விஜயை வைத்து மக்கள் திரளாக கூடும் இடத்தில் படமாக்குவது இயலுமா? அப்புறம் என்ன கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போல் செட்டு போட்டு அந்த சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார். 


அதனால விஜய் யார் கூடவும் சண்டை போடலைங்க... அவர் படப்பிடிப்புக்காகதான் சண்டை போட்டுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: