'ஈ' திரைப்படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக ஜீவா-நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'திருநாள்'. ராமநாதன் இயக்கிய இந்த படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 


கிராம பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜீவா முரட்டு தனமான ரவுடியாக நடித்துள்ளார். நயன்தாரா ஸ்கூல் டீச்சராக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி, திரையரங்கில் வெளிவருகிறது. 


இந்நிலையில், சமீபகாலமாக ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் பெரிதாக வரவேற்பு பெறாததால், அவர் இந்த படம் தனக்கு வெற்றியை அளிக்கும், மீண்டும் திரையுலகில் தனது மார்க்கட் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளலாம் என எதிர்பார்த்துள்ளார். 


அவரது எதிர்ப்பார்ப்பை, 'திருநாள்' நிறைவேற்றுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: