'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் அடுத்து கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் வெளிவரவுள்ளது. இதையடுத்து அவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது ஆகியவற்றை நாம் ஏற்கனவே அறிந்தோம். 


இந்நிலையில் இந்த படத்தை முடித்த பின் சிம்பு, பாலா இயக்கவுள்ள புது படத்தில் நடிக்கவுள்ளார். முதன்முறையாக பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள சிம்பு, 'ஏ ஏ ஏ' திரைப்படத்தை முடித்த பிறகு இந்த புதுப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளாராம். 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: