சென்னை:
நன்றி... நன்றி என்று அனிருத்திற்கு இவர் நன்றி சொல்லி இருக்கிறார். எதற்கு நன்றி... யார் சொன்னது நன்றி என்று பார்ப்போமா!


சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளது. இவரது முதல் படம் போடா போடி பெரிசாக கைகொடுக்கவில்லை. ஆனால் அதற்கு அப்புறம் வந்த 'நானும் ரௌடி தான்' பெரிய வெற்றி பெற்று விக்னேஷ் சிவனுக்கு நல்ல மதிப்பை பெற்று தந்தது. 


இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இப்போ இவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு யார் காரணம் தெரியுங்களா? கண்டிப்பாக நயன்தாரா இல்லீங்க... இசை அமைப்பாளர் அனிருத்தான் முழு காரணமாம். இதை விக்னேஷ் சிவனே தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றியும் சொல்லியிருக்கார்...இந்த படத்திற்கு அனிருத் இசை என்பதும் குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: