சென்னை:
அடுத்த ஆண்டு திருமணம்... இதுக்கு மேல எங்கப்பாதான் தகவல் சொல்வார் என்று இத்தனை நாட்களாக வாய் திறக்காத நாக சைதன்யா சொல்லிட்டார்... சொல்லிட்டார்....


தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜீனா-அமலா தம்பதியின் மகன் நடிகர் நாக சைதன்யா.  இவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகின்றனர் என்று வதந்திகள் ராக்கெட் வேகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் 2 குடும்பத்தினரும் வாய் திறக்காமல் உள்ளனர். 


இந்நிலையில்தான் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நாகசைதன்யாவை நம்ம நிருபர்கள் சுற்றி வளைத்தனர். கேள்விகள் பறந்தன. அதில் முக்கால்வாசி கேள்விகள்... உங்களது திருமணம் எப்போது என்பதுதான். 


அதற்கு நாக சைத்தன்யா எனது திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். மற்றபடி தேதி எல்லாம் என் தந்தை அறிவிப்பார், தற்போது என்னால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்று போட்டார் பாருங்க... ஒரு அதிரடியை... அப்போ.. விஷயம் உண்மைதான்... கத்திரிக்காய் முற்றி சந்தைக்கு வந்து விட்டது என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: