ராய்ப்பூர்:
திருந்தி வாழ்ந்தவர்களை தாக்க திட்டமிட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதியை என்கவுண்டரில் போட்டு தள்ளியுள்ளனர் பாதுகாப்பு படையினர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்படும் மாவோயிஸ்டுகளில் பலர் சரண் அடைந்து வருகின்றனர். இவர்கள் அரசின் மறுவாழ்வு திட்டத்தின்கீழ் உதவி பெற்று திருந்தி வாழத் தொடங்கி உள்ளனர்.


இதனால் அவர்கள் மீது மாவோயிஸ்ட் இயக்கத்தினர் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சரண் அடைந்தவர்கள் மற்றும் ரகசிய உளவாளிகள் மீது தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் பாதுகாப்பு படையினருக்கு வந்து சேர்ந்துள்ளது.


அப்புறம் என்ன அதிரடி ஆபரேஷன்தான். கோயபெகுர் கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட... விடுவார்களா? பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.


இந்த என்கவுண்டரில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். அந்த நபர், ஜனதா சர்க்கார் அமைப்பின் தலைவனாக செயல்பட்ட மேதா பெஞ்சமி என்ற குக்கல் மதா என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஹாட்டாக பரவி வருகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: