'வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன்' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் எழில் தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் ஹீரோ என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளிவரவில்லை.


இந்நிலையில் வரும் 21-ந்தேதி, இந்த புது படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.சென்னையில் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 


இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். மேலும் சென்னை படப்பிடிப்பை முடித்த பின், காரைக்காலில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: