விஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தின் இசை வெளீயீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய்சேதுபதி பேசியது "அருண்குமாருடன் வேலை செய்யும்போது நெருக்கமாக உணர்கிறேன்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதிக்கு பின் வேறு நடிகர் படங்களை இயக்குமாறு அருணுக்கு பரிந்துரைத்தேன்.அது நடக்காததால் மீண்டும் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிந்துபாத் கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. சொன்னால் பிரச்சனை வாய்ப்பு உள்ளதால் அதை சொல்லவில்லை.ஒருவன் ஹீரோவின் மனைவியை தூக்கி கொண்டு போய்விடுவான், மனைவியை ஹீரோ மீட்கிறான், எப்படி என்பதுதான் கதை. இந்த கதையில் இரண்டாம் பாதி முழுவதுமே கிளைமாக்ஸ்தான். இந்த படத்தின் கதை புராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel