திருநெல்வேலி:
ஓடும் பஸ்சில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது மற்ற பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம்வீ ரவநல்லூரில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரெனெ அந்த பஸ்சில் இருந்த இரண்டு பேரை சில மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி தள்ளினர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த 2 பேரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஓடும் பஸ்சில் இந்த சம்பவம் நடந்தது.


இந்த கொடூர கொலையை கண்ட பயணிகள் சத்தம்போட்டு அலறவே டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதை பயன்படுத்திக் கொண்டு அந்த கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பட்டப்பகலில், ஓடும் பஸ்சில் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: