காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தொண்டு நிறுவனம் மீது தீவிரவாதிகள நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முதலில் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். பின்னர் துப்பாக்கிகளால் சுட... இதில் ஒருவர் பலியானார்.


தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் கடும் துப்பாக்கி சண்ட நடந்தது. சில மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


தொண்டு நிறுவனத்தின் உள்ளே இருந்த பத்து வெளிநாட்டினர் உள்பட 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: