சென்னை:
சொல்லிட்டாருங்க... இனிமே எந்த மாற்றமும் இருக்காதுங்க... இருக்கவே இருக்காது. என்ன விஷயம்னா...


ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார். 


இப்படத்தில் அவர் நாயகி, இவர் நாயகி என்று தகவல்கள் உலா வந்தது. கடைசியாக ராகுல் ப்ரீத் சிங் என்றும் சொன்னாங்க. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வர்ல. ஆனா இப்ப இவர்தான் நாயகி என்று இயக்குனர் முருகதாஸே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சொல்லிட்டார். யார் தெரியுங்களா? ராகுல் ப்ரீத் சிங் தான் தன்னுடைய அடுத்த படத்தின் நாயகி என்று உறுதிபடுத்தியுள்ளார். அப்புறம் என்ன இனி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிதான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: