ஐதராபாத்:
இவ்வளவா... இவ்வளவா... ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்கிறது ஐதராபாத் என்றால் விஷயமும் பிரமாண்டமாகத்தானே இருக்கும்.


உண்மைதான்... இடி, மின்னல், மழை இதை அனைத்தையும் ஒன்றாக பார்த்தால் எப்படி இருக்கும். அதுபோல்தான் இருக்கிறது. சிரஞ்சீவியின் கைதி எண் 150 படம். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் எந்த ஒரு செலவையும் குறைக்காமல் பிரமாண்டமாக... மிக பிரம்மாண்டமாக செலவு செய்ய தயார் நிலையில் உள்ளனர். 


அதில் ஒன்று தான் இதுவும். என்ன தெரியுங்களா? இப்படத்தில் இடம்பெறும் 2 பாடலுக்கு நடனம் அமைக்க சிரஞ்சீவி பிரபுதேவாவை அணுகியுள்ளார். சிரஞ்சீவியே கேட்டுள்ளதால் நடனம் அமைத்துத் தர பிரபுதேவாவும் சம்மதித்து விட்டார். இந்த 2 பாடலுக்காக நடனம் அமைக்கும் பிரபுதேவாவுக்கு படக்குழுவினர் எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளனர் தெரியுங்களா?


ரூ. 1 கோடி சம்பளம் தர உள்ளார்களாம்... இதுதான் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடனம் அமைப்பதற்காக இதுவரை எந்த ஒரு நடன கலைஞரும் இத்தனை கோடி சம்பளம் வாங்கியதே இல்லை, இதுவே முதன்முறை என்கின்றனர். பிரபுதேவா என்றால் என்ன சும்மாவா?


మరింత సమాచారం తెలుసుకోండి: