மொகடிஷீ:
சோமாலியா - கென்யா எல்லைப்பகுதியில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடந்து வரும் ஆட்சியை அகற்றவும், எதிர்த்தும் ஆயுதப் போராட்டத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்..


இவர்கள் வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் இவர்கள் செய்யும் அட்டூழியம் மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 


இந்நிலையில், கென்யா மற்றும் சோமாலியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் அல் ஷபாப் தீவிரவாதிகள் சோமாலியா நாட்டு ராணுவ வீரர்களை வழிமறித்து கடும் தாக்குதல் நடத்த இதில் ஐந்து ராணுவ வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாம். 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: