தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான பஞ்சு அருணாச்சலம் உடல் நல குறைவால் காலமானார்.


இவர் கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம், உதவியாளராக பணிபுரிந்தவர். இவர் 1964-ம் ஆண்டு 'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் உள்ள ''பொன்னெழில் பூத்தது'' பாடலை இயற்றி, பாடலாசிரியராக சினிமாவிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து ஏராளமான பாடல்கள் இயற்றியதோடு, பல திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.


தமிழசினிமாவின் முக்கிய புள்ளியான பஞ்சு அருணாச்சலம், இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது வயது 75. இவரது உடல் தற்போது பொது மக்கள், பார்வைக்காக தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  


மேலும் இவரது இறுதி சடங்கு நாளை நடைபெறவுள்ளது. இவரது உடலுக்கு திரை நட்சத்திரங்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: