மொகதிசு:
சோமாலிய தலைநகர் மொகதிசுவில் பயங்கரவாதிகள் கார் மூலம் நடத்திய இரண்டு தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (இந்த தீவிரவாதத்திற்கு என்றுதான் முற்றுப்புள்ளி விழுமோ என்று தெரியவில்லை.) இந்த சம்பவத்திற்கு அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.


மொகதிசுவில் போலீஸ் அலுவலகம் அருகே பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பயங்கரவாதி ஒருவர் உள்ளே நுழைத்து துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக பரபரப்பாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.


அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்படும் பிரச்னையில் இடையில் சிக்கி பலியாவது அரசு அதிகாரிகளும், அப்பாவி பொதுமக்களும் தான். 


మరింత సమాచారం తెలుసుకోండి: