சென்னை:
குடி போதையில் ஆடிக்காரில் அதிவேகமாக வந்து தொழிலாளி மீது மோதி அவர் பலியாக காரணமாக இருந்த பெண் சிறையில் கம்பி எண்ணுகிறார். ஆனால் இறந்த தொழிலாளி குடும்பமோ... வறுமையில் சிக்கி தவிக்கிறது. இவர்களுக்கு உதவ ஓடி வந்துள்ளார் நடிகர் விஷால்.


ஆமாங்க... சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் பொறியாளரான ஐஸ்வர்யா, தனது நண்பர்களுடன் குடிபோதையில் ஆடிக்காரில் அதிக வேகத்தில் வந்து தரமணி அருகே வைத்து தச்சுதொழிலாளி முனுசாமி(53) மீது மோதி அவர் இறக்க காரணமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா


இப்போது அந்த ஆடிக்கார் ஐஸ்வர்யா... சிறையில் கம்பி எண்ணுகிறார். ஆனால் முனுசாமியின் குடும்பமோ... வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில்தான் நடிகர் விஷால் இறந்த முனுசாமியின் மகன் ஆனந்த் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவரின் பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பிற்கான செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். நல்ல மனசு... வாழ்த்துவோம்...

முனுசாமி


మరింత సమాచారం తెలుసుకోండి: