சென்னை:
செம மப்பில்... போலீசார் வாகனத்தை சொட்டையாக்கிய நடிகர் அருண்விஜய் தலைமறைவாக இருக்கார்ன்னு போலீசார் சொல்றது உள்குத்து வேலைன்னு மக்கள் புலம்பறாங்க.


எப்படி தெரியுங்களா? அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் ராதிகாவின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மூச்சுமுட்ட மது குடித்துள்ளார். அப்புறம் காரை எடுத்து கொண்டு ஆக்சிலேட்டரில் காலை வைக்க அது ஜிவ்வுன்னு பறந்து இருக்கு...


நிதானம் இழந்த நிலையில் அருண் விஜய் தன் காரை போலீசார் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதில் இவரது காரில் பாதுகாப்பு சாதனங்கள் இருந்ததால் அவர் செம சேப். ஆனால் போலீசாரின் வாகனத்தின் சேப்தான் மாறி போச்சு. அப்புறம் வழக்கம் போல் போலீசார் அவரை கைது செய்ய... அவர் அப்பா விஜயகுமார் வந்து கவனிக்க... இதை தொடர்ந்து 2 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட சொன்னாங்களாம். 

arun vijay car case க்கான பட முடிவு


ஏங்க... இப்படிதான் அனுப்பி வைப்பீங்களா... சாதாரண மக்களை... போட்டு நெம்பி எடுத்துட மாட்டீங்க... அப்ப பிரபலம் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமான்னு நெட்டிசன்கள் கிழித்து எடுத்தது தனிக்கதை. ஆனால் கையெழுத்து போட அருண்விஜய் வரவே இல்லியாம். இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையாம்.


என்னங்க இது அநியாயம்... இது நம்பறாப்பல இல்லியே என்கின்றனர் மக்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: